THAMIL LANKA NEWS

dimarts, 12 de novembre del 2019

3ஆவது நாளாவும் தொடரும் சிறைக்கைதிகளின் போராட்டம்

றோயல் பாக் கொலையுடன் தொடர்புடையவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பை வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெலிக்கடை, அங்குனுகொலபெலஸ்ஸ, மற்றும் பூசா ஆகிய சிறைச்சாலைகளில் மரண தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் இன்றும் 3ஆவது நாளான ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், றோயல் பாக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியது போன்று தங்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கமாறு இதன்போது கோரியுள்ளனர்.
மேலும், கடந்த 11ஆம் திகதி முதல் சிறை கைதிகள் போராட்டத்தை முன்னெடுத்து வருவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பந்துல ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.