இந்தியக் கடற்படையின் வலிமையை அதிகரிக்கும் வகையிலும், உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்கும் வகையிலும் 111 இலகு ரக ஹெலிகாப்டர்களை வாங்க கடற்படை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து வெளிநாட்டு விமானத் தயாரிப்பு நிறுவனங்களின் கூட்டு முயற்சியுடன் உள்நாட்டு நிறுவனங்களையும் களமிறக்க மத்திய அரசு திட்டமிட்டது.
இதையடுத்து இலகு ரக ஹெலிகாப்டரை தயாரித்து வழங்க டாடா, அதானி, மஹிந்திரா டிபென்ஸ் சிஸ்டம் மற்றும் பாரத் போர்ஜ் என்ற 4 நிறுவனங்கள் தங்கள் பங்களிப்பைச் செலுத்த முன்வந்துள்ளன.
25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்த வாய்ப்பைப் பெறும் நிறுவனம், அமெரிக்காவின் சிகோர்ஷ்கி – லாங்ஹீட் மார்ட்டின் மற்றும் ரஷ்யாவின் ரோஸோபோராநெக்ஸ்பர்ட் ஆகிய ஏதாவது ஒரு நிறுவனத்துடன் இணைந்து ஹெலிகாப்டர்களை தயாரிக்கும் என கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Cap comentari:
Publica un comentari a l'entrada