‘சூடா மாணிக்கம்’ பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் மக்கள் தரிசனத்துக்காக அண்மையில் வைக்கப்பட்டிருந்தது.
THAMIL LANKA NEWS
dilluns, 25 de novembre del 2019
ருவன்வெலிசாயவில் ‘சூடா மாணிக்கம்’ திறந்து!….
அநுராதபுரத்தில் அமைந்துள்ள ருவன்வெலிசாயவில் பௌத்த சின்னமான சூடா மாணிக்கம் இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
Etiquetes de comentaris:
ருவன்வெலிசாயவில் ‘சூடா மாணிக்கம்’ திறந்து!….
Ubicació:
80 Galle Rd, Colombo 00300, Sri Lanka
உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இறுதியில்…
இந்த ஆண்டு நடைபெற்ற உயர்தர பரீட்சை பெறுபேறுகளை அடுத்த மாதத்தில் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் பீ. சனத் பூஜித இது தொடர்பாக தெரிவிக்கையில் உயர் தரப்பரீட்சை பெறுபேறுகளை அடுத்த மாதம் இறுதி வாரத்தில் வெளியிடப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இம் முறை உயர்தர பரீட்சை கடந்த ஆகஸ்ட் மாதம் 5 திகதி தொடக்கம் 31ம் திகதி வரை 2 ஆயிரத்து 628 மத்திய நிலையங்களில் இடம்பெற்றது.
இதில் 3 இலட்சத்து 37 ஆயிரத்து 704 பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
Etiquetes de comentaris:
உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இறுதியில்…
Ubicació:
80 Galle Rd, Colombo 00300, Sri Lanka
வடமேல்மாகாண ஆளுநராக முஸ்லிம் ஒருவர் நியமனம்! ஞானசாரதேரர்வெளியிட்ட_கருத்து!
வட மேல் மாகாண ஆளுநராக ஏ.ஜே.எம். முஸம்மில் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுபல சேனாவின் பெயரில் வெளியான கடிதம் இல்லையென நிராகரித்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இதனைக் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் இனவாதம் பேசிக் கொண்டு செயற்படுவது நாட்டுக்கு பொருத்தமற்றது எனவும் தேரர் மேலும் கூறினார்.
Etiquetes de comentaris:
வடமேல்மாகாண ஆளுநராக முஸ்லிம் ஒருவர் நியமனம்!
Ubicació:
80 Galle Rd, Colombo 00300, Sri Lanka
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் சவூதி தூதுவர் சந்திப்பு!….
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சவுதி அரேபிய தூதுவர் அப்துல் நசர் அல் ஹர்த்தி உள்ளிட்ட தூவர் குழுவினர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது சவுதி அரேபிய அரசாங்கத்தின் சார்பில் தூதுவர் உள்ளிட்ட தூதுக் குழுவினர் ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
ஜனாதிபதி அலுவலகத்தில் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு பிரித்தானிய அரசாங்கத்தின் சார்பில் தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.
இந்த சந்திப்பு தொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி, சவுதி அரேபிய தூதுவர் அப்துல் நசர் அல் ஹர்த்தி உள்ளிட்ட குழுவினரை சந்தித்ததில் மகிழ்ச்சி என பதிவிட்டுள்ளார்.
Etiquetes de comentaris:
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் சவூதி தூதுவர் சந்திப்பு!….
Ubicació:
Singapore
அமைச்சர் தினேஷ் குணவர்தன இந்திய, சீன தூதுவர்கள் சந்திப்பு!..
வெளிநாட்டு உறவுகள், திறன் அபிவிருத்தி தொழிற்துறை அமைச்சராக தினேஸ் குணவர்த்தன பொறுப்பேற்றதை அடுத்து, இந்திய, சீன தூதுவர்கள் தினேஸ் குணவர்த்தனவை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டு உறவுகள், திறன் அபிவிருத்தி தொழிற்துறை அமைச்சராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தினேஸ் குணவர்த்தன தமது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இதையடுத்து, இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்துவும், சீன தூதுவர் செங் ஷியுவானும், அமைச்சர் தினேஷ் குணவர்தன சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அத்துடன் இருதரப்பு உறவுகள் குறித்தும் அமைச்சர் தினேஷ் குணவர்தன அமைச்சருடன், இந்திய, சீன தூதுவர்கள் கலந்துரையாடியுள்ளனர்.
கடல் தொழிலாளர்களுக்கான எச்சரிக்கை
கடல் கொந்தளிப்பு சற்று அதிகமாக காணப்படுவதால் ஒருநாள் மற்றும் சிறு மீன்பிடிப் படகுகளும் கவனமாக செயற்பட வேண்டும் என கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டை சுற்றுயுள்ள கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும் என திணைக்களத்தின் தேடுதல் நடவடிக்கைப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் பத்மபிரிய தெரிவித்துள்ளார்
அந்த வகையில் , காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை, பொத்துவில் கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Etiquetes de comentaris:
கடல் தொழிலாளர்களுக்கான எச்சரிக்கை
Ubicació:
80 Galle Rd, Colombo 00300, Sri Lanka
வாகன விபத்தில் ஒருவர் பலி!…
பிலியந்தலை ஜாலியகொட இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கெஸ்பேவ நகரில் இருந்து ஜாலியகொட பகுதியை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மின்கம்பம் மற்றும் மற்றுமொரு முச்சக்கர வண்டியுடன் மோதியை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
19 வயதுடைய மோட்டார் சைக்கிள் சாரதி விபத்தில் படுகாயமடைந்த பிலியாந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அன்னாரின் சடலம் பிலியந்தலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த ஏனையோர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் பிலியந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Etiquetes de comentaris:
வாகன விபத்தில் ஒருவர் பலி!…
இன்று நள்ளிரவுடன் மேலதிக வகுப்புகள் நடத்தத் தடை!..
கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், மாநாடுகள் மற்றும் மீளாய்வுப் பரீட்சைகள் ஆகியன இன்று நள்ளிரவுடன் நிறைவுசெய்யப்பட வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்துள்ளார்.
இன்று நள்ளிரவின் பின்னர் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் பட்சத்தில் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்குமாறும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்வாறான முறைப்பாடுகள் தொடர்பில் 1911 என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் துரித தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 011 27 84 208, 011 27 84 537, 011 31 88 350 அல்லது 011 31 40 314 ஆகிய தொலைபேசி இலக்கங்களூடாக பரீட்சைகள் திணைக்களத்திற்கு அறிவிக்க முடியும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Etiquetes de comentaris:
இன்று நள்ளிரவுடன் மேலதிக வகுப்புகள் நடத்தத் தடை!..
Ubicació:
Sri Lanka
இன்றைய வானிலை அறிக்கை!….
நாட்டில் வட கிழக்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாக உருவாகி வருகின்றதுடன் 2019 நவம்பர் 27ம் திகதியிலிருந்து நாடு முழுவதும் முழுமையாக தாபிக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
எனவே நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் காணப்படும் மழையுடனான வானிலை மேலும் அதிகரிப்பு ஏற்படும் சாத்தியம் காணப்படுகின்றது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடக்கு, கிழக்கு, ஊவா, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய மலைநாட்டுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
Etiquetes de comentaris:
இன்றைய வானிலை அறிக்கை!….
Ubicació:
Sri Lanka
MCC உடன்படிக்கையில் தமது அரசாங்கம் கைச்சாத்திடப்போவதில்லை: விமல் வீரவங்ச
#wimalweerawansa #mcc #sri_lanka_local_news #thamillankanews
அமெரிக்காவுடனான MCC உடன்படிக்கையில் தமது அரசாங்கம் கைச்சாத்திடப்போவதில்லை என அமைச்சர் விமல் வீரவங்ச கூறியுள்ளார்
அமெரிக்காவுடனான MCC உடன்படிக்கையில் தமது அரசாங்கம் கைச்சாத்திடப்போவதில்லை என அமைச்சர் விமல் வீரவங்ச கூறியுள்ளார்
Etiquetes de comentaris:
MCC உடன்படிக்கையில் தமது அரசாங்கம் கைச்சாத்திடப்போவதில்லை: விமல் வீரவங்ச
Ubicació:
India
பெரிய வெங்காயத்தில் தட்டுப்பாடு
தற்போது விளைச்சலில் உள்ள பெரிய வெங்காயத்தின் தொகையானது, எதிர்வரும் பண்டிகைக்காலத்துக்கு பற்றாக்குறையாக இருக்கும் என்று அத்தியாவசிய உணவுத் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து பெருந்தொகையான பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது.
அனால் மழை காரணமாக அந்த இறக்குமதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Etiquetes de comentaris:
பெரிய வெங்காயத்தில் தட்டுப்பாடு
Ubicació:
Sri Lanka
இறால் மற்றும் கடலட்டை உற்பத்தியை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை
மீன் வளர்ப்பு, நண்டு, மற்றும் இறால் கடலட்டை போன்ற கடல்வாழ் உயிரினங்களின் உற்பத்தியை மேலும் விரிவுபடுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் , அதற்கான பயிற்சிகளையும் சலுகைகளையும் பெற்றுக்கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
Etiquetes de comentaris:
இறால் மற்றும் கடலட்டை உற்பத்தியை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை
Ubicació:
Sri Lanka
சமையல் எரிவாயு விடயத்தில் முடிவே கிடையாதா?!
சமையல் எாிவாயு கொள்கலன் ஒன்றின் விலை சில நாட்களின் முன்னர் 250 ரூபாவால் குறைப்பதற்கு வாழ்க்கை செலவு குழு அனுமதி வழங்கிய போதும் நுகர்வோர் விவகார அதிகார சபை அதனை இதுவரை பொருட்படுத்தப்படவில்லை.
இவ்வாறு விலை குறைக்கப்படுவதாக வெளியாகும் தகவல்களால் சமையல் எாிவாயு கொள்கலன்களை தொகையாக வைத்துக்கொள்ள வா்த்தகா்கள் பயன்படுவதால் இந்த பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தொியவந்துள்ளது.
ஆகையால் எரிவாயு தொடர்பாக தோட்டபுரங்களில் இதுவரை எந்த ஒரு சரியான முடிவும் கிடைக்கவில்லை என தகவல் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தகக்கது.
Etiquetes de comentaris:
சமையல் எரிவாயு விடயத்தில் முடிவே கிடையாதா?!
Ubicació:
Sri Lanka
பட்டதாரிகளுக்கு கோட்டாபய விடுத்துள்ள மகிழ்ச்சி செய்தி
தான் ஆட்சியை பெற்றுக்கொண்டதன் பின்னர் 54 ஆயிரம் பட்டதாரிகளுக்கு அடுத்த வருடம் ஜனவரி மாதம் தொழில்வாய்ப்பு வழங்கப்படும் என கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும் தண்ணீர், மின்சாரம் மற்றும் சமையல் எரிவாயு என்பனவற்றுக்காக மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கௌ்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் அனைவருக்கும் அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி அளவில் தொழில்வாய்ப்பு வழங்கப்படும். அரச துறையில் ஒரு இலட்சம் அளவில் வெற்றிடம் உள்ளது.
திறன்கள் தொடர்பில் அவசியமற்ற தொழில்வாய்ப்புகள் அவற்றில் உள்ளன. இந்த நிலையில், திறன்கள் தொடர்பில் அவசியமற்ற தொழில்துறையில், ஒரு தொழில்வாய்ப்பு வறுமையில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும்.
இதனூடாக அவர்களை வறுமையிலிருந்து மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மக்கள் தங்களது கடமையை நிறைவேற்றினால், பாதுகாப்பான, சௌபாக்கியமான நாட்டை உருவாக்குவேன் என்ற உறுதிமொழியை தங்களுக்கு வழங்குவதாகவும் கோத்தாபய ராஜபக்ச மேலும் தெரிவித்திருந்தார்.
Etiquetes de comentaris:
பட்டதாரிகளுக்கு கோட்டாபய விடுத்துள்ள மகிழ்ச்சி செய்தி
Ubicació:
Singapore
தனது கடமைகளை பொறுப்பேற்றார் மஹிந்த
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதியமைச்சில் இன்று தனது பதவிகளை பொறுப்பெடுத்துக்கொண்டார் .
Etiquetes de comentaris:
தனது கடமைகளை பொறுப்பேற்றார் மஹிந்த
Ubicació:
Singapore
அரச அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை
விரைவில் அமுலுக்கு கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டமூலம் ஒன்றிற்கு அமைய பிரதமர் மஹிந்தராஜபக் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளார்.
இன்று ராஜகிரியாவில் நிதியமைச்சராக பொறுப்பேற்கும் வேளையிலே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
Etiquetes de comentaris:
அரச அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை
Ubicació:
United States
மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி இராஜினாமா
மத்திய வாங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தனது இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்துள்ளார்.
மேலும் , அவர் தனிப்பட்ட காரணங்களின் காரணமாகவே பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் , அவர் தனிப்பட்ட காரணங்களின் காரணமாகவே பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
Etiquetes de comentaris:
மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி இராஜினாமா
Ubicació:
Canada
Subscriure's a:
Missatges (Atom)