வென்னப்புவ பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
தாம் விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தை நிறைவு செய்ததன் பின்னர் மீண்டும் நாட்டில் பயங்கரவாதம் இடம்பெறுவதை தவிர்க்க விசேட பாதுகாப்பு படை பிரிவு ஒன்றை ஸ்தாபித்தோம்.பின்னர் அவர்கள் வேறு துறைக்கு மாற்றப்பட்டனர்.
எனினும் அவர்கள் தங்களது புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் பல தகவல்களை வெளிப்படுத்தினார்கள்.
அதற்கு அமைச்சரவையில் இருந்த சிலர் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டாம் என அவர்களை எச்சரிக்கை விடுத்தனர் .
இவ்வாறான தவறுகள் காரணமாகவே உயிர்த்த ஞாயிறு அன்று பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது.
இருப்பினும், தமது ஆட்சியின் ஊடாக அந்த நிலையை மாற்றியமைப்போம்.
குறித்த தாக்குதல் தொடர்பான விசாரணைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு அதனுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளர்.
Cap comentari:
Publica un comentari a l'entrada