THAMIL LANKA NEWS

dimecres, 6 de novembre del 2019

கொழும்பில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

கொழும்பு – தர்மபால வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த நிலையில் கொலைச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 9.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவத்தில் 49 வயதான ஆண் ஒருவரே உயிரிழந்துள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.
மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.