இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 7வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ நேற்று ருவண்வெலிசேயவில் சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.
இன்று முற்பகல் ஜனாதிபதி செயலாளர் காரியாலயத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று தமது பொறுப்புக்களை கையேற்கவுள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளைய தினம் கண்டி ஸ்ரீ தலதாமாளிக்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
ஜனாதிபதியின் புதிய செயலாளராக பேராசிரியர் பி.பி. ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேநேரம் பாதுகாப்பு செயலாளராக மேஜர் ஜெனரால் கமல் குணரத்ன நியமிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
Cap comentari:
Publica un comentari a l'entrada