THAMIL LANKA NEWS

dilluns, 18 de novembre del 2019

புதிய ஜனாதிபதியின் புதிய செயலாளர் நியமனம்!….

ஜனாதிபதியின் புதிய செயலாளராக பேராசிரியர் பீ.பி ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் சிரேஸ்ட அதிகாரியாகவும், பொருளாதார நிலையத்திலும் கடமையாற்றியுள்ள அவர் அமெரிக்காவில் தமது உயர் பட்டப்படிப்பை பூர்த்தி செய்துள்ளார்.
அத்துடன் நிதியமைச்சினதும், திறைசேரியினதும் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
அதேநேரம் புதிய பாதுகாப்பு செயலாளராக ஓய்வு பெற்ற மேஜர் ஜென்ரல் கமல் குணரட்னம் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் நாட்டில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது 53 வது படைப்பிரிவை வழிநடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.