THAMIL LANKA NEWS

dilluns, 18 de novembre del 2019

ஜனாதிபதி கோட்டபாய வழங்கிய முதல் நியமனம்!

இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் நியமித்த முதலாவது நியமனம் இலங்கையின் புதிய பாதுகாப்பு செயலாளர் பதவியாகும் அப்பதவிக்கு இலங்கையின் புதிய பாதுகாப்பு செயலாளராக ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ தளபதி கமால் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் 7-வது நிறைவேற்று அதிபராக கோத்தபாய ராஜபக்சே நேற்று பதவி ஏற்றார். மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் கோத்தபாய ராஜபக்சதான் பாதுகாப்பு செயலாளராக இருந்தார்.
அப்போதுதான் 2009-ல் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தம் நடைபெற்றது. இந்நிலையில் இலங்கையின் புதிய பாதுகாப்பு செயலாளராக கமால் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் 2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தில் 53-வது படைப்பிரிவின் தளபதியாக இருந்தவர். மேலும’ தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், மூத்த தளபதி சூசை உள்ளிட்டோரை தங்களது படைப்பிரிவுதான் கொன்றதாக ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தவர் இந்த கமால் குணரத்ன.