இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் நியமித்த முதலாவது நியமனம் இலங்கையின் புதிய பாதுகாப்பு செயலாளர் பதவியாகும் அப்பதவிக்கு இலங்கையின் புதிய பாதுகாப்பு செயலாளராக ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ தளபதி கமால் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் 7-வது நிறைவேற்று அதிபராக கோத்தபாய ராஜபக்சே நேற்று பதவி ஏற்றார். மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் கோத்தபாய ராஜபக்சதான் பாதுகாப்பு செயலாளராக இருந்தார்.
அப்போதுதான் 2009-ல் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தம் நடைபெற்றது. இந்நிலையில் இலங்கையின் புதிய பாதுகாப்பு செயலாளராக கமால் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் 2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தில் 53-வது படைப்பிரிவின் தளபதியாக இருந்தவர். மேலும’ தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், மூத்த தளபதி சூசை உள்ளிட்டோரை தங்களது படைப்பிரிவுதான் கொன்றதாக ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தவர் இந்த கமால் குணரத்ன.
Cap comentari:
Publica un comentari a l'entrada