இதனால் பொதுமக்களின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து பொதுத் தேர்தலை உடன் நடத்துவது சிறந்தது என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாராஹென்பிட்டி அபேராம விஹாரையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
நாட்டின் தேவையைக் கருத்திற்கொண்டு எந்தவொரு தேர்தலுக்கும் தமது ஆணைக்குழு தயாராகவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பொதுத் தேர்தலுக்கோ அல்லது மாகாண சபை தேர்தலுக்கோ எந்த சந்தர்ப்பத்திலும் தாம் தயாராகவுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
Cap comentari:
Publica un comentari a l'entrada