அயோத்தி வழக்கில் தீர்ப்பு இன்று வெளியாக உள்ள நிலையில், நாட்டு மக்கள் அமைதி காக்கும்படி பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உச்சநீதிமன்றம் வழங்கவிருக்கும் தீர்ப்பை நாடே எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, தீர்ப்பு எதுவாயினும் அனைத்துத் தரப்பினரும் அமைதி காக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
வழக்கின் தீர்ப்பு யாருக்கும் வெற்றி- தோல்வி அல்ல என்று கூறியுள்ள அவர், அமைதி, ஒற்றுமை, சகோதரத்துவத்தை நாட்டில் மேலும் வலுப்படுத்த நாம் அனைவரும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும் கோரிக்கை விடுத்துள்ளார்.
தீர்ப்புக்கு நமது எதிர்வினைகள் அமைதியாக இருக்க வேண்டும் என்றும், பகையைத் தூண்டும் வகையில் யாரும் பேசக்கூடாது எனவும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Cap comentari:
Publica un comentari a l'entrada