THAMIL LANKA NEWS

divendres, 8 de novembre del 2019

திடீர் மின்சாரம் துண்டிப்பு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை திடீர் மின்சாரம் துண்டிப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக விமான நிலைய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விமான நிலையத்தின் பிரதான மின்கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று காலை 8.50 மணியளவில் இந்த மின்சார தடை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், சுமார் 30 நிமிடங்கள் இந்த மின்சார தடை நீடித்துள்ள நிலையில், விமான நிலைய குடிவரவு குடியகழ்வு பிரிவு உள்ளிட்ட அனைத்து பணிகளும் தாமதமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.