THAMIL LANKA NEWS

divendres, 8 de novembre del 2019

பதவிக்கு வந்ததும் புதிய பிரதமர்

தாம் பதவிக்கு வந்த பின்னர், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவைக் கொண்ட, புதியவர் ஒருவரை பிரதமராக நியமிப்பேன் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபிதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி மூலம் நிகழ்த்திய உரையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
புதிய பிரதமர், முதல் முறையாக அந்தப் பதவிக்கு வருபவராகவும், நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவு பெற்றவராகவும் இருப்பார்.
இதேவேளை, ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட எவரையும் தனது அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப் போவதில்லை.
தமது அமைச்சரவை திறைமையான இளைஞர்களைக் கொண்டதாக இருக்கும்.
அவர்கள் தமது சொத்துக்களின் விபரங்களை வெளியிட வேண்டியிருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.