THAMIL LANKA NEWS

divendres, 8 de novembre del 2019

விசேட ரயில் சேவைகள்

நீண்ட வாரயிறுதி விடுமுறையை முன்னிட்டு கொழும்பு, கோட்டையில் இருந்து பதுளை வரை விசேட ரயில் சேவைகள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை ரயில் திணைக்களம் கூறியுள்ளதுடன், எதிர்வரும் திங்கட்கிழமை வரை இந்த விசேட ரயில் சேவை முன்னெடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கொழும்பு, கோட்டையில் இருந்து இரவு 7.35 பயணத்தை ஆரம்பிக்கும் விசேட ரயில், அதிகாலை 4.33 மணிக்கு பதுளை ரயில் நிலையத்தை சென்றடையும்.
அத்துடன், இரவு 8 மணிக்கு பதுளையில் புறப்படும் ரயில் அதிகாலை 5.26 மணிக்கு கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தை வந்தடையும்.