THAMIL LANKA NEWS

diumenge, 10 de novembre del 2019

ஜனாதிபதி மைத்திரி தலைமைதாங்கும் இறுதி அமைச்சரவை கூட்டம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமைதாங்கும் இறுதி அமைச்சரவை கூட்டம் இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் 11 மணிக்கு இந்த அமைச்சரவை கூட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், கடந்த கால வேலை திட்டங்கள் தொடர்பில் விசேட அறிக்கை ஒன்றையும் ஜனாதிபதி இதன்போது சமர்ப்பிக்கவுள்ளதோடு அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்து விசேட உரை ஒன்றையும் ஆற்றவுள்ளார்.
இதேவேளை, இந்த வாரத்திற்குள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றினையும் ஆற்றவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
by Parthiban