THAMIL LANKA NEWS

diumenge, 10 de novembre del 2019

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் வாகன தரிப்பிடத்தில் திடீர் தீ பரவரல்

கொழும்பு ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் வாகன தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டி மற்றும் 47 உந்துருளிகளில் திடீர் தீ பரவல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 47 மோட்டார் சைக்கிள்களும், முச்சக்கர வண்டி ஒன்றும் சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், தீ பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், சம்பவம் தொடர்பில் கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.