THAMIL LANKA NEWS

diumenge, 10 de novembre del 2019

ஐந்து நீதியரசர்கள் கொண்ட ஆயம் நியமனம்

மிலேனியம் (எம் .சீ.சீ) ஒப்பந்ததிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை பரிசீலிக்க ஐந்து நீதியரசர்கள் கொண்ட ஆயம் பிரதம நீதியரசரினால் நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த ஐவரடங்கிய நீதியரசர் குழாமிற்கு தலைமை நீதிபதியாக உயர்நீதிமன்ற நீதியரசர் புவனேக அலுவிஹாரே நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், உயர்நீதிமன்ற நீதியரசர்களான எல்.டீ.பி. தெஹிதெனிய, முர்து பெர்னாண்டோ, எஸ். துரைராஜா, காமினி அமரசேகர ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேசேளை, ஐவரடங்கிய நீதியரசர் குழாம் முன்னிலையில் குறித்த மனுக்கள் எதிர்வரும் 13 ம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.