THAMIL LANKA NEWS

diumenge, 10 de novembre del 2019

விசேட நாடாளுமன்ற அமர்வு இன்று…….

பிரதமர் ரணில்விக்ரமசிங்க விடுத்துள்ள கோரிக்கைக்கு அமைவாக ,விசேட நாடாளுமன்ற அமர்வு இன்று முற்பகல் 11.30 முதல், பிற்பகல் 2.30 வரை இடம்பெறவுள்ளதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
விளையாட்டுத்துறையுடன் தொடர்புடைய தவறுகள் குறித்த சட்டமூலம் தொடர்பில் விவாதிப்பதற்காக நாடாளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 7ஆம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரை அடுத்து, எதிர்வரும் டிசம்பர் மாதம் 3ஆம் திகதிவரை நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதற்கு முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று நாடாளுமன்ற அமர்வு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.