THAMIL LANKA NEWS

dimarts, 26 de novembre del 2019

ஜனாதிபதி தலைமையில் புதிய அமைச்சரவைக் கூட்டம்!…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று முற்பகல் 11.30 மணி அளவில் நடைபெறவுள்ளது.
சில திட்டங்கள் தொடர்பான யோசனைத் திட்டங்களை முன்வைக்கப்பட்டு இன்று கலந்துரையாடப்படவுள்ளது.
இந்த நிகழ்வில் புதிய அரசாங்கத்தின் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம் செய்யவுள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை 9 மணியளவில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஸ முன்னிலையில் பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெறவுள்ளது.
அமைச்சுக்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய செயலாளர்களுக்கான நியமனக் கடிதங்களும் இன்று வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.