THAMIL LANKA NEWS

dimarts, 26 de novembre del 2019

விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம்!…

இன்று நாட்டின் 6 மாவட்டங்களில் விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
டெங்கு நோயாளர்கள் அதிகளவில் பதிவாகியுள்ள மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை, கொழும்பு, கம்பஹா, மாத்தளை ஆகிய 6 மாவட்டங்களில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக டெங்கு ஒழிப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர், டொக்டர் அருண ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
இன்று முதல் எதிர்வரும் 6 நாட்களுக்கு இந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.