THAMIL LANKA NEWS

dijous, 21 de novembre del 2019

இரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து!….

மொரட்டுவ – அங்குலானையில் அமைந்துள்ள இரசாயன தொழிற்சாலையொன்றில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 3.15 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக மொரடுவை பொலிஸார் தெரிவித்தனர்.
தீயினை கட்டுப்படுத்துவதற்காக 10 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தொழிற்சாலை கட்டிடம் நான்கு மாடிகளை கொண்டது என பொலிஸார் தெரிவித்துள்ள நிலையில், பிரதேச வாசிகள், பொலிஸார், தெஹிவலை, மொரடுவை, மருதானை மற்றும் கல்கிஸ்ஸ தீயணைப்பு பிரிவினர் இணைந்து தீயிணை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மொரடுவை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தீப்பரவலுக்கான காரணம் மற்றும் சேதவிபரங்கள் வெளிப்படுத்தப்படவில்லை.