THAMIL LANKA NEWS

dimecres, 20 de novembre del 2019

பிரதமர் பதவியிலிருந்து விலக ரணில் முன்வைத்த நிபந்தனை!…

பிரதமர் பதவிலிருந்து விலகுவதற்கு ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் சில நிபந்தனைகளை முன்வைத்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
பொது ஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுவதேவ நாணயக்கார இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளை ஜனாதிபதி நிராகரித்துள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கோட்டாபயவின் அரசாங்கத்ததில் தாம் எதிர்கட்சி தலைவராக செயலாற்ற வேண்டும் என்ற கோரிக்கை உள்ளிட்ட பல நிபந்தனைகளை முன்வைத்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பதவிகாலம் எதிர்வரும் மார்ச் மாதம் நிறைவடைய உள்ள நிலையில் இந்த நிபந்தனைகளை ரணில் முன்வைத்துள்ளார்.
19 ஆவது அரசியல் அமைப்பிற்கு அமைய பிரதமரின் ஆலோசனைக்கமையே ஜனாதிபதி சில தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்பதால் பிரதமராக ரணில் பதவியிலுள்ளமை முட்டுக்கட்டையாக இருப்பதாக கோட்டாபய அரசாங்கம் கருதுகிறது.