THAMIL LANKA NEWS

dimecres, 20 de novembre del 2019

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்வை இராணுவ தளபதி சந்திப்பு!!!

இலங்கையின் புதிய ஜனாதிபதியும் முப்படைகளின் தளபதியான அதிமேதகு கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி செயலகத்தில் 2019 நவம்பர் மாதம் 18ம் திகதி பதவியை பொறுப்பேற்றுகொண்ட பின்னர், ஜனாதிபதி செயலகத்தில் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் சந்தித்தார்.
இதன் போது இலங்கையின் 7 ஆவது நிறைவேற்று ஜனாதிபதிக்கு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துகொண்டதுடன், முப்படைகளின் தளபதியினால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, இராணுவமானது தேசிய கடமைகளை நிறைவேற்றுவதற்காக சிறந்த ஒத்துழைப்பை வழங்கும் என்று உறுதிபடுத்தினார்.
புதிய ஜனாதிபதியின் கடமை பொறுப்பேற்றுதலை முன்னிட்டு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா புதிய ஜனாதிபதிக்கு நினைவு சின்னத்தை வழங்கினார்.