THAMIL LANKA NEWS

dimecres, 20 de novembre del 2019

போக்குவரத்தை ஒழுங்குப்படுத்திய எம்பிஏ மாணவி!!!

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் தனது நடனத்தின் மூலம் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் எம்பிஏ மாணவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
புனேவில் எம் பி ஏ படித்துவரும் சுபி ஜெயின் என்ற மாணவி 15 நாள் கல்விசார் பயிற்சிக்காக இந்தூர் வந்துள்ளார்.
அங்கு நிலவும் போக்குவரத்து நெரிசலை கண்ட மாணவி சுபி ஜெயின், அதனை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட முயன்றார்.
அதன்படி மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை வாகன நெரிசல் மிகுந்த பகுதிகளில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தி வருகிறார்.
தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதையும், சீட்பெல்ட் போட வேண்டும் என்பதையும் தனது நடன அசைவு மூலம் சுபி ஜெயின் வலியுறுத்துவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.