THAMIL LANKA NEWS

dimecres, 13 de novembre del 2019

3729 முறைப்பாடுகள்!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 3 ஆயிரத்து 729 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது குறித்து தொடர்ந்தும் தேர்தல் ஆணைக்குழு தெரிவிக்கையில்,
கடந்த மாதம் 8ஆம் திகதியில் இருந்து நேற்று வரை 3729 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 27 முறைப்பாடுகளும் மற்றும் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பில் 3596 முறைப்பாடுகளும் அவற்றுள் அடங்குகின்றன.
அத்துடன், நேற்றைய தினத்தில் மாத்திரம் 102 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவை அனைத்தும் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பில் பதிவாகியுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.