THAMIL LANKA NEWS

dimecres, 13 de novembre del 2019

ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு : 7 பேர் பலி!!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், காரில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியதில் 7 பேர் உயிரிழந்தனர்.
காபூலின் கொசாபா பகுதியில் உள்ள உள்துறை அமைச்சகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் இன்று திடீரென வெடித்து சிதறியது.
இதில் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பயங்கரவாத அமைப்பு எதுவும் பொறுப்பேற்கவில்லை.