THAMIL LANKA NEWS

dimecres, 13 de novembre del 2019

கடற்றொழிலாளர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

புத்தளம் முதல் மன்னார் ஊடாக செல்லும் காங்கேசன்துறை வரையான கடற்பகுதிகளில் வீசும் காற்றின் வேகம் மணிக்கு 70-80 கிலோமீற்றராக அதிகரிக்கக்கூடும் என
எதிர்வுகூறப்பட்டுள்ளது.
குறித்த தகவலை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பகல் அல்லது இரவு வேளைகளில் இந்த காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பில் கடற்படையினர் மற்றும், கடற்றொழிலாளர்கள் அவதானமாக இருக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.