THAMIL LANKA NEWS

dimecres, 13 de novembre del 2019

இளம் வயது குடும்பம் பெண் கொலை : கணவர் உள்ளிட்ட இருவர் கைது!

கிளிநொச்சியில் – அக்கராயன்குள பொலிஸ் பிரிவிற்குபட்ட பகுதியில் இளம் வயது குடும்பம் பெண் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டு, நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சம்பவம் குறித்து உயிரிழந்த பெண்ணின், கணவர் மற்றும் அவரின் உறவினர் ஒருவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
சத்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவந்த நிலையில், இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவரின் அன்ரன் ஜெயராஜ் மேரி அகிலா ( வயது 29) சடலம் உறவினர்களிடம் கையளிக்கபட்ட நிலையில் இன்றைய தினம் அவரின் இறுதி சடங்கு இடம்பெற்றதாக எமது பிராந்திய செய்திளார் தெரிவித்தார்.
மேலும், இந்த சம்பவம் குறித்து தெராடர்ந்தும் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.