குறித்த மனு மீதான விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 31ம் திகதி வரையில் பிற்போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புவனேக அளுவிஹார, எல்.டீ.பி. தெஹிதெனிய, மூர்து பெர்ணாண்டோ, எஸ்.துரைராஜா மற்றும் காமினி அமரசேகர ஆகிய ஐந்து நீதியரசர்கள் அடங்கிய ஆயத்தினால் இன்று இந்த மனு பரிசீலிக்கப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், சட்டத்தரணிகள் குழுமம் மற்றும் பௌத்த தகவல் மையம் ஆகியவை சார்பில் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், நாட்டில் அமெரிக்க படையினரை தரையிறக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் செய்யப்படுவதாக மனுவில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன், நாடாளுமன்றம் மற்றும் மக்களின் அனுமதி இன்றி, குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவது, நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Cap comentari:
Publica un comentari a l'entrada