THAMIL LANKA NEWS

dimecres, 13 de novembre del 2019

காவல்துறை தலைமையகம் மீது வெடிகுண்டு தாக்குதல்!!

இந்தோனேஷியாவில் உள்ள காவல்துறை தலைமையகத்தில் இன்று காலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
வடக்கு சுமத்ராவில் உள்ள மேடன் நகரில் காவல் துறையின் தலைமை அலுவலகம் உள்ளது. காவல்துறை அதிகாரிகளை சந்திக்கவும், புகார் மனு கொடுப்பதற்காகவும் இன்று காலை பொதுமக்கள் பலர் கூடியிருந்த நிலையில், கார் பார்க்கிங் பகுதியில் பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது.
இதில் காவல் துறை அதிகாரிகள் உள்பட சிலர் காயமடைந்தனர். முதற்கட்ட விசாரணையில் காவல்துறை தலைமையகத்தை குறிவைத்து தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.