குறித்த நிகழ்வு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸ்ஸலால் சில்வா தலைமையில் நேற்று இடம்பெற்றுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபாராக கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்ட அனுரா அபேயவிக்கிரமவின் பதவிக்காலம் எதிர்வரும் 18ஆம் திகதியுடன் நிறைவடைவதை முன்னிட்டு அவருக்கான விஷேட அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டதுள்ளது.
அத்துடன், பொலிஸ் உத்தியோகத்தர்களினால் பிரியாவிடை நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், நிகழ்வில் பொலிஸ் அத்தியட்சகர்களான மல்வலகே. வீரக்கோன், வவுனியா, நெடுங்கேணி, கனகராஜன்குளம், ஓமந்தை, பூவரசன்குளம், செட்டிகுளம் போன்ற பகுதியின் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள், பொலிஸார், சர்வ மதத்தலைவர்கள், வர்த்தகப்பிரமுகர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
செய்தி, புகைப்படங்கள்: வவுனியா பிராந்திய செய்தியாளர்
Cap comentari:
Publica un comentari a l'entrada