THAMIL LANKA NEWS

dijous, 14 de novembre del 2019

வாக்காளர்களுக்கான மகிழ்ச்சி செய்தி!

எதிர்வரும் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு விசேட போக்குவரத்த சேவை செயற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
குறித்த போக்குவரத்து சேவை இன்று முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், வாக்களிப்பதற்காக வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் நலன் கருதி இந்த விசேட போக்குவரத்து சேவை செயற்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.