குறித்த சம்பவம் தொடர்பில் தமிழ் லங்கா செய்தி பிரிவு கிளிநொச்சி போலீசாரிடம் தொடர்பு கொண்டு வினவியபொழுது இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் , கிளிநொச்சியில் மாணவியைக் கடத்தியவர்களைக் கைது செய்வதில் பொலிஸார் பொறுப்பாக ஈடுபடவில்லை என கடத்தப்பட்ட மாணவியின் பெற்றோர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளனர்.
இவ் விடயம் குறித்து மேலும் தெரியவந்துள்ளதாவது கடந்த 18 ஆம் திகதி காலை மேலதிக வகுப்பிற்கு சென்ற மாணவியை காரில் வந்த சில மர்ம நபர்களால் இதன்போது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் இலக்கம், கடத்திய நபர் ஒருவரின் புகைப்படம், தொலைபேசி இலக்கம் என்பன பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன.
எனினும் போதுமான ஆதாரங்கள், தடயங்கள் இருந்தும் கடத்தலுடன் சம்பந்தப்பட்ட எவரும் சம்பவம் நடந்து ஒரு மாதமாகியும் கைது செய்யப்படவில்லை.
இது குறித்து பெற்றோர் பொலிஸாரிடம் கேள்விகேட்டபொழுது அவர்கள் அலட்சியமாக பதில் தருவதாகவும் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் தெரிவித்தனர்.
இந்நிலையில், உரிய நடவடிக்கை எடுக்கத்தவறிய பொலிஸாருக்கு எதிராக யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் முறையிட்டுள்ளனர்.
Cap comentari:
Publica un comentari a l'entrada