சிங்கள பௌத்த வாக்குகளில் தாம் வெற்றிப்பெற்றவன் என அறிவித்து தமிழ் முஸ்லிம் மக்களை கோட்டாபய ராஜபக்ச அச்சத்தில் ஆழ்த்தியுள்ளார் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் பொது செயலாளர் ட்ரில்வின் சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
சிங்கள பௌத்த அரசாங்கத்தை அமைக்கும் நோக்கில் ராஜபக்ச சகோதரர்கள் செயற்பட்டு வருகின்றனர் என தெரிவித்த அவர், இதனால் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.
சிறுபான்மை மக்களை கொண்ட தேசம் என்ற வகையில் அதனை புறக்கணித்து அவர் செயற்படுவாராயின் பாரிய சர்வதேச அழுத்தத்தை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
Cap comentari:
Publica un comentari a l'entrada