THAMIL LANKA NEWS

dissabte, 23 de novembre del 2019

கொலம்பியாவில் பயங்கர குண்டுவெடிப்பு!…. #colombia

கொலம்பியாவில் திடீர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 3 பொலிஸார் உயிரிழந்துள்ளதோடு, 10 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் கொலம்பியா தென்மேற்கு பகுதியில் சாண்டாண்டர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் நேற்றைய தினதி கொலம்பியாவவின் தென்மேற்கு பகுதியில் சாண்டாண்டர் நகர பொலிஸ் நிலையத்தின் அருகமையில் வாகனத்தில் வைக்கப்பட்ட குண்டு இவ்வாறு வெடித்துள்ளது.
கொலம்பியாவில் அரசுக்கு எதிராக கடந்த சில நாட்களாக தீவிரமான போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தக் குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
இந்தக் குண்டுவெடிப்பு தொடர்பில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.