THAMIL LANKA NEWS

dissabte, 23 de novembre del 2019

டெங்கு காய்ச்சலால் ஒருவர் பலி!… #Dengue_killed_in_sri_lanka

#Dengue_killed_in_sri_lanka

டெங்குக் காய்ச்சல் காரணமாக கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் அதிகாலை உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்றத்தின் பின்னர் 2010ஆம் ஆண்டிலேயே முதலாவது டெங்கு நோயாளி இனங்காணப்பட்டார்.
இந்நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் இம் மாதம் முதலாம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை 35 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக மாவட்ட வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு டெங்கு நோய் தாக்கத்தை ஏற்படுத்தும் நுளம்புகள் பெருகும் நிலையில் சூழல்களை வைத்திருக்க வேண்டாம் எனவும், பொது மக்களிடம் மாவட்ட சுகாதார பிரிவினர் கோரியுள்ளனர்.
டெங்கு நோய்த்தாக்கம் மேலும் அதிகரித்து செல்லாது தடுப்பதற்கு சுற்றுப்புறச் சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் எனவும் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.