THAMIL LANKA NEWS

dissabte, 23 de novembre del 2019

சபாநாயகர் பதவி யாருக்கு….. #maithripala_sirisena #thamillanka

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரதிப்பிரதமர் பதவி போன்ற கெளரவமான பதவியொன்றை வழங்கவேண்டுமே நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சபாநாயகர் பதவிக்கு சமல் ராஜபக்ஷ்வை நியமிக்கப்போவதாக தெரிவிக்கப்பட்டிருந்தபோதும், அவர் நேற்றைய தினம் அமைச்சுப்பொறுப்பை பெற்றுக்கொண்டிருந்தார்.  
ஆகையால் தற்போது சபாநாயகர் பதவிக்கு யார் நியமிக்கப்படுவர்கள் என்ற கேள்வி எழுப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் சபாநாயகராக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவை நியமிக்கவேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனார்.