THAMIL LANKA NEWS

dimarts, 5 de novembre del 2019

10 மடங்காக அதிகரிக்கும் யுரேனியம் கையிருப்பு -எதிரி நாட்டிற்கு நன்றி கூறும் ஈரான்

கடந்த 2015 ஆம் ஆண்டு அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ரஷியா, இங்கிலாந்து, ஜேர்மன் ஆகிய நாடுகளுடன் வரலாற்று சிறப்பு மிக்க அணுவாயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை ஈரான் ஏற்படுத்தியது. ஆனால் இந்த விடயம் அமெரிக்க நலனுக்கு எதிரானது என கூறி இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது.
அத்துடன் ஒப்பந்தம் மூலம் விலக்கபட்டிருந்த பொருளாதார தடைகளை மீணடடும் அமெரிக்கா ஈரான் மீது விதித்தது இதனால் ஈரானின் பொருளாதாரம் சீர்குலைந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அணு ஆயுதங்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை அதிகரிப்போவதாக ஈரான் எச்சரித்தது.
இது குறித்து கடந்த செப்டெம்பர் மாதம் 7 ம் திகதி ஒப்பந்தத்தில் உள்ள ஏனைய ஐரோப்பிய நாடுகள் இப் பிரச்சனையை சுமூகமாக தீர்க்காவிடில் யுரேனியம் கையிருப்பை அதிகரிப்பதாக எச்சரித்து தீர்மானம் எடுக்க 60 நாட்கள் கால அவகாசம் வழங்கியது.
நேற்றுடன் 60 நாட்கள் கால அவகாசம் முடிவடைந்த நிலையில் செறிவூட்டப்பட்ட யுரேனியம் உற்பத்தியை முன்னர் இருந்ததை விட பத்து மடங்காக அதிகரித்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. இது குறித்து ஈரானின் அணுசக்தி அமைப்பின் தலைவர் சலேஹி கூறுகையில்
இரு மாதங்களுக்கு முன்பு இது நாளொன்றுக்கு 450 கிராம் அளவில் தயாரிக்கபட்ட செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பு செப்டம்பர் 7 ஆம் திகதி செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்புக்களை அதிகரிக்கும் நடவடிக்கைகளை தொடங்கி நாளென்றிற்கு 5 கிலோ அளவில் யுரேனியம் தற்போது தயாரிக்கப்படுகிறது.
ஈரானிய பொறியாளர்கள் ஐஆர் -9 இன் முன்மாதிரி ஒன்றை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர். இது எங்கள் புதிய இயந்திரம் ஆகும். மேலும் ஐஆர்-எஸ் என்ற புதிய இயந்திரத்தின் மாதிரியும் உருவாக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் இரண்டு மாதங்களில் நடந்தவை. இது செறிவூட்டப்பட்ட யுரேனியம் உற்பத்தியில் அதிவேக வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.
அணுசக்தி துறையில், ஈரான் நாட்டின் வலிமையைக் காட்ட இந்த வாய்ப்பை தந்ததற்கு எதிரிக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும், என தெரிவித்தார்.