உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஏற்பாட்டில் “முக்கியஸ்தர் முகவரி -3” நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் 10திகதி நடைபெறவுள்ளது.
குறித்த நிகழ்வு கொழும்பு கொட்டாஞ்சேனை ஐங்கரன் மண்டபத்தில் எதிர்வரும் 10திகதி ஞாயிற்று கிழமை மாலை 5.30மணியளவில் இடம்பெறவுள்ளது.
ஜனரஞ்சக எழுத்தாளர் மொழிவாணன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்வில் உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் துணைத்தலைவர் செந்தில் வேலவர், புரவலர் புத்தக பூங்கா நிறுவனர் புரவலர் ஹாஸிம் ஒமர், ஜனநாயக மக்கள் காங்கிரஸின் முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேஷன் மற்றும் ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் பிரகாஷ் கணேஷன், வத்தளை பிரதேச சபை உறுப்பினர் ஆர். விஜயகுமார், வத்தளை மாபோலை நகரபை உறுப்பினர் எஸ். சசிகுமார், வீரகேசரி நாளிதழின் பிரதம ஆசிரியர் எஸ். ஸ்ரீகஜன், கொட்டாஞ்சேனை ஸ்ரீ வரதராஜ விநாயகர் ஆலயம் அறங்காவலர் ஈ. கணேஷ் தெய்வநாயகம், முன்னாள் பொலிஸ்மா அதிபர் கே. அரசரட்ணம், மித்திரன் வாமலரின் ஆசிரியர் பொன்மலர் சுமன், பூபாலசிங்கம் புத்தகசாலையின் உரைிமையாளர் ஆர்.பி.ஸ்ரீதர்சிங் மற்றும் கலை, இலக்கிய சமூக சேவையாளர் கௌசல்யாதேவி கோவிந்ப்பிள்ளை எள பலரும் கலந்த கொள்ளவுள்ளனர்.
Cap comentari:
Publica un comentari a l'entrada