யாழ்ப்பாணம் புறநகர் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் தனது சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரன் ஊடாக நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
குறித்த மனுவில், தனது கணவர் குளிப்பது இல்லை எனவும் தன்னால் அவருடன் வாழ முடியாது எனவும் தனக்கு அவரிடமிருந்து விவாகரத்தைப் பெற்றுக் கொடுக்குமாறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த பெண்ணின் கணவர் தனது சட்டத்தரணி ரி.கணதீபன் ஊடாக மனைவியின் விவாகரத்து கோரிக்கையை ஏற்றுக்கொண்டு வழங்குவதற்கு எதிர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில் மனு மீதான விவாதம் இன்று நடத்தபட்டது. இதன்போது, யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் குறித்த மனுவை தள்ளுபடி செய்தது.
‘நீங்கள் காதலித்து திருமணம் செய்வீர்கள். பின்னர் குளிக்கவில்லை போன்ற சட்டத்தில் கூறப்படாத காரணங்களைக் குறிப்பிட்டு விவாகரத்து கேட்டு வந்தால் நீதிமன்றம் கட்டளை ஆக்க முடியாது’ என்று யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதி வி.இராமகமலன் தனது கட்டளையில் கண்டிப்பாக தெரிவித்துள்ளார்.
Cap comentari:
Publica un comentari a l'entrada