THAMIL LANKA NEWS

dimarts, 5 de novembre del 2019

உடுதும்பர காசியப தேரர் உணவு தவிர்ப்பு போராட்டத்தினை கைவிட்டார்

அமெரிக்காவுடன் எம்சிசி கொடை உடன்பாட்டில் இலங்கை அரசாங்கம் கையெழுத்திடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உடுதும்பர காசியப தேரர் முன்னெடுத்த உணவு தவிர்ப்பு போராட்டத்தினை நேற்றிரவு கைவிட்டார்.
கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நேற்றுக்காலை தொடக்கம் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.
இந்த நிலையில், எம்சிசி உடன்பாடு தொடர்பாக, அதிபர் வேட்பாளர்களான சஜித் பிரேமதாசவும், கோத்தாபய ராஜபக்சவும், உடுதும்பர காஷ்யப்ப தேரருக்கு தனித்தனியாக உறுதிமொழிக் கடிதங்களை சமர்ப்பித்துள்ளனர் என குறிப்பிடப்படுகின்றது.