THAMIL LANKA NEWS

dimarts, 5 de novembre del 2019

தலைமைச் செயலாளர் எல்.வி. சுப்பிரமணியம் திடீர் பதவி நீக்கம்!!!

ஆந்திர மாநில தலைமைச் செயலாளர் பதவியில் இருந்த எல்.வி. சுப்பிரமணியம் நீக்கப்பட்டார்.
சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக தேர்தல் ஆணையத்தால் அவர் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். முதலமைச்சராக ஜெகன்மோகன் ரெட்டி பொறுப்பேற்றதும் எல்.வி. சுப்பிரமணியன் அதே பொறுப்பில் நீடித்து வந்தார்.
இந்நிலையில், முதன்மைச் செயலாளர் பிரவீன் பிரகாஷ் விதிமுறைகளை மீறியதாக கூறப்படும் விவகாரத்தில் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் எல்.வி. சுப்பிரமணியம் நோட்டீஸ் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அவரைப் பதவி நீக்கம் செய்துள்ளார். எல்.வி. சுப்பிரமணியம் தற்போது மனிதவள வளர்ச்சி கழகத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.