சகல தேர்தல்கள் தொகுதிகளிலும் உள்ள மக்களை சந்திப்பதற்காக தாம் அவர்கள் அருகில் செல்வதற்கு தயாராகவுள்ளேன் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தெல்தெனிய பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் அவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதி செயலணியை ஸ்தாபித்து 24 மணித்தியாலத்துக்குள் வழங்க வேண்டிய சகல தீர்வுகளையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், நாட்டு மக்களை பாதுகாக்கும் ஜனாதிபதியையே பொதுமக்கள் தெரிவு செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Cap comentari:
Publica un comentari a l'entrada