THAMIL LANKA NEWS

dimarts, 5 de novembre del 2019

ஜனாதிபதி தேர்தலின் வாக்குப் பெட்டிகளை எடுத்துக் செல்ல 1100 பேருந்துகள்

எதிர்வரும் 16திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின்போது வாக்குப் பெட்டிகளை எடுத்துக் செல்வதற்காக 1100 பேருந்துகள் கோரப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
குறித்த தகவலை இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி முகாமையாளர் பி.எச்.ஆர்.டி சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
இததேவேளை, தேர்தல் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய குறித்த பேருந்துகளை மேற்படி நடவடிக்கைக்காக பயன்படுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.