THAMIL LANKA NEWS

dimecres, 27 de novembre del 2019

சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க கோரி கடிதம்!!

srilanka ,11.28.2019:TM2
பாராளுமன்ற உறுப்பிப்பினரான சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கக் கோரி, ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் 57 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடனான கடிதமொன்று நேற்று மாலை சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதம் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், 57 பேரின் கையொப்பத்துடன் கிடைத்த கடிதத்தின் பிரதியையும் அவருக்கு அனுப்பியுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.