THAMIL LANKA NEWS

dimecres, 27 de novembre del 2019

துப்பாக்கியுடன் ஒருவர் கைது!…

அக்மீமன, முத்தலதனஹென பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமையவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக அக்மீமன பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.