ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த பயணத்தின் போது, இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரைச் சந்தித்துப் இருதரப்பு பேச்சுவார்த்தையில் மேற்கொள்ளவுள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச செயலாளர் P.B. ஜயசுந்தர, வௌிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க, திறைசேரியின் செயலாளர் S.R. ஆட்டிகல, ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோர் இந்த பயணத்தில் கலந்துக்கொள்ளவுள்ளனர்.
நாளை காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முதலில், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரைச் சந்தித்துப் பேசவுள்ளார் என்று இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதையடுத்து, இந்திய குடியரசுத் தலைவர் மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு வரவேற்பு அளிக்கப்படும். அத்துடன் மகாத்மா காந்தியின் நினைவிடத்திலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அஞ்சலி செலுத்துவார்.
இதன் பின்னர் ஹைதராபாத் இல்லத்தில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சந்தித்துப் பேசவுள்ளார்.
நாளை மாலை இந்திய குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சந்தித்து பேச்சு நடத்துவார்.
#thamillankanews #tamil_news #sri_lanka_local_news #president_gotabaya #flying_to_india
Cap comentari:
Publica un comentari a l'entrada