THAMIL LANKA NEWS

dimecres, 27 de novembre del 2019

இம்ரான் கான் முடிவிற்கு உச்சநீதிமன்றம் தடை

பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் ஜாவீத் பஜ்வாவிற்கு பணிக்காலம் முடிவடைந்த பின்பும் இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு அவரிக் பதவிக்காலத்ததை நீடிக்க இம்ரான் கான் அரசு உத்தரவிட்டது.
ஆனால் இம் முடிவை உச்சநீதிமன்றம் நிராகரித்து தீர்ப்பளித்துள்ளது. அமைச்சரவையின் பெரும்பான்மை அமைச்சர்களின் ஆதரவு கிடைக்காமை மற்றும் பாகிஸ்தான் அதிபரின் சம்மதம் இன்மை போன்ற காரணங்களால் ராணுவத் தளபதியின் பதவி நீட்டிப்பை அந்நாட்டு உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவத்திற்குள் குழப்பங்கள் நிலவுவதாகவும் இது இம்ரான் கான் அரசை கவிழ்க்க முயற்ச்சியாகும் எனவும் சந்தேகிக்கபடுகிறது.