THAMIL LANKA NEWS

dimecres, 27 de novembre del 2019

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களுக்கான புதிய தலைவர்கள் நியமனம்!…

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர்களுக்கான பதவியை வழங்கப்பட்டது.
நேற்று இடம்பெற்ற மாவட்ட இணைப்புக் குழுக்களுக்கான புதிய தலைவர்கள் நியமனத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான முத்து சிவலிங்கம், காதர் மஸ்தான், அங்கஜன் இராமநாதன், எஸ்.வியாழேந்திரன் உள்ளிட்டோரும், மாவட்ட இணைப்புக் குழு தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட இணைப்புக் குழுக்களுக்கான புதிய தலைவர்கள் நேற்றைய தினம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழுத் தலைவராக விஜயதாச ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.
சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே கம்பஹா மாவட்ட இணைப்புக்குழுவின் தலைவியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
களுத்துறை மாவட்ட இணைப்புக்குழுவின் தலைவராக பியெல் நிஷாந்தவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
கண்டி மாவட்ட இணைப்புக்குழுவின் தலைவராக சரத் அமுனுகம நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாத்தளை மாவட்ட அபிவிருத்தி இணைப்புக்குழுவின் தலைவராக லக்ஷ்மன் வசந்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
நுவரெலியா மாவட்ட இணைப்புக்குழுவின் தலைவராக முத்து சிவலிங்கமும் நியமிக்கப்பட்டுள்ளார்.
காலி மாவட்ட இணைப்புக்குழுவின் தலைவராக சந்திம வீரக்கொடியும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாத்தறை மாவட்ட இணைப்புக்குழுவின் தலைவராக நிரோஷன் பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தின் அபிவிருத்தி இணைப்புக்குழு தலைவராக அங்கஜன் இராமநாதனும், மன்னார் மாவட்ட இணைப்புக்குழுவின் தலைவராக காதர் மஸ்தானும், மட்டக்களப்பு மாவட்ட இணைப்புக்குழுவின் தலைவராக எஸ்.வியாழேந்திரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்ட இணைப்புக்குழு தலைவராக ஸ்ரீயாணி விஜேவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார்.
அனுராதபுர மாவட்ட இணைப்புக்குழு தலைவராக வீரகுமார திசாநாயக்கவும், பதுளை மாவட்ட இணைப்புக்குழுவின் தலைவராக தேனுக விதானகமகேயும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கேகாலை மாவட்ட இணைப்புக்குழுவின் தலைவராக சாரதி துஷ்மன்னவும், இரத்தினபுரி மாவட்ட இணைப்புக்குழு தலைவராக துனேஷ் கங்கந்தவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.