THAMIL LANKA NEWS

dimecres, 27 de novembre del 2019

இரு மோட்டார் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

மட்டக்களப்பு கல்முனை பகுதியில் உள்ள கல்லடி பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் இரு பொலிஸார் உட்பட 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் ஒன்று நேற்று மதியம் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
கல்லடி, வேலூர் 4 ம் தெரு காளிகோவில் வீதியைச் சேர்ந்த மீன் வியாபாரியான 61 வயதுடைய சவுந்தரராஜன் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.