THAMIL LANKA NEWS

dimarts, 19 de novembre del 2019

அரசாங்கத்தை கையளிக்க பிரதமர் ரணில் தயார்!…

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று தமது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் சபை முதல்வர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும், ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்களுக்கும் இடையில் இன்று சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது, ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதா அல்லது நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்குச் செல்வதா என்பது குறித்து கலந்துரையாடப்படும்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.